அவதூறு வழக்கு: திருப்பூர் கோர்ட்டில் விஜயகாந்த், பிரேமலதா மார்ச் 24ல்நேரில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: தமிழக அரசை அவமதித்து அவதூறாக பேசியதாக தொரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் பல்லடத்தில் திருப்பூர் மாவட்ட தேமுதிக சார்பில் பொது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்து பேசியதாக விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் மீது புகார் எழுந்தது.

vijaykanth and premalatha asked to appearin court-regarding defamation case

இதையடுத்து அவதூறாக பேசியது தொடர்பாக விஜயகாந்த் மற்றும் பிரமேலதா ஆகியோர் மீது திருப்பூர் முதன்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்படடது. இந்த வழக்கில், வரும் 24-ஆம் தேதி தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரமேலதா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று திருப்பூர் முதன்மை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே வெள்ளப் பாதிப்பு குறித்து பேசியதாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேரில் ஆஜராகும்படி சம்மன்) அனுப்ப சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கில் விஜயகாந்த் ஏப்ரல் 25-ஆம் தேதி,விஜயகாந்த் ஆஜராக வேண்டும் என்று சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+