பவானியில் கரைபுரண்டு ஓடுது வெள்ளம்.. ஆனால் குடிக்க நீரில்லையே...!
ஆற்றுபகுதியை தோண்டி மக்கள் குடிநீர் எடுத்து வருகிறார்கள்.
ஈரோடு: பவானி ஆற்றில் ஒரு பக்கம் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஆனால் கிராம மக்கள் குடிக்க நீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
வைரமங்கலம் என்ற கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எப்பவுமே பவானி ஆற்றில் இருந்துதான் குடிநீர் விநியோகம் செய்வது வழக்கம்.

மூழ்கிய இயந்திரங்கள்
போன வாரம் பவானி ஆற்றில் கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கரைபுரண்ட வெள்ளத்தில் குடிநீர் எடுக்கும் இயந்திரங்களும் அடியோடு மூழ்கிவிட்டது. அந்த இயந்திரங்கள் இருந்ததற்கான தடம் கூட தெரியவில்லை. இயந்திரங்கள் மூழ்கிவிட்டதால் குடிக்க தண்ணீரின்றி கிராம மக்கள் அவதிப்பட்டனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய ஆரம்பித்தது.

புகார் மனுக்கள்
மின்மோட்டார்கள் வெளியே கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தன. தண்ணீரில் மூழ்கிய மோட்டார் எப்படி வேலை செய்யும்? அதனை சரி செய்வார்கள் என்று கிராம மக்கள் எதிர்பார்த்தால், ஒரு வாரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகாரும், கோரிக்கை மனுவும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியும் விட்டார்கள்.

ஆற்றுப் பகுதியில் கிராம மக்கள்
எப்போது மின்மோட்டாரை சீர் செய்து எப்போது தங்களுக்கு தண்ணீர் வழங்குவது என மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. அதோடு எவ்வளவு நாளுக்குதான் குடிநீரின்றி கஷ்டப்படுவது என நினைத்த கிராம மக்கள் பவானி ஆற்று பகுதிக்கே வந்துவிட்டனர். எல்லோர் கையிலும் குடங்கள்.

ஊற்று நீரை எடுத்த மக்கள்
பவானி ஆற்று பகுதிக்கு வந்த மக்கள் அங்கு பள்ளங்களை தோண்ட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அந்த ஊற்றில் வந்த நீரை குடங்களில் பிடித்து சென்று கொண்டிருககிறார்கள். ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடினாலும் குடிநீருக்காக மக்கள் ஊற்று தோண்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications