முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கண்டித்து லட்சுமிபுரத்தில் மனித சங்கிலி போராட்டம்
ராட்சத கிணறு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை கண்டித்து கிராம மக்கள் லட்சுமிபுரத்தில் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்: தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓபிஎஸ்ஸைக் கண்டித்து கிராம மக்கள் இன்று மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு மிகப் பெரிய ராட்சத கிணறுகள் 2 உள்ளன.
இதனால் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. ஊராட்சிக்கு குடிநீர் பற்றாக்குறை நிலவியது.

மக்கள் போராட்டம்
ஒபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரம் கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனிடையே, சர்ச்சைக்குரிய கிணற்றை தானமாக வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கிணற்றை ஒப்படைக்கவில்லை
ஆனால் அதற்கான எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. மேலும், கிணற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் ஓபிஎஸ் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் போராட்டம்
இந்நிலையில், கடந்த 3 தினங்களாகக் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 6ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். 7ம் தேதியான நேற்று குத்து விளக்கேற்றி போராட்டம் நடத்தினர்.

கறுப்புக் கொடி போராட்டம்
இன்று காலை கிராமத்தில் உள்ள வீடுகள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து லட்சுமிபுரத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

மக்களை அவமதிக்கும் ஓபிஎஸ்
முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், தனது சொந்த ஊர் மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு மதிப்பளிக்காமல் சென்னையிலேயே இருந்து கொண்டு மக்களை அவமதிப்பதாகக் கிராமத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் போராட்டத்திற்கு மதிப்பளித்து கிணற்றை பொது மக்களிடம் உடனடியாக ஓபிஎஸ் ஒப்படைக்க வேண்டும் என்று கிராமத்தினர் கோரி வருகின்றனர்.
-
விழிபிதுங்கி நிற்கும் பாகிஸ்தான்.. முக்கிய நீர் ஆதாரம் காலி! இந்தியா ஸ்டைலில் ஆப்கான் கொடுத்த அடி -
சல்லி சல்லியா நொறுங்கிய தங்க மார்க்கெட்! 200 வருஷ பழக்கமே மாற போகுது! புலம்பி தவிக்கும் வியாபாரிகள்! -
திருப்பத்தூரில் 140 கிராம் தங்க நகைகள் அடமானம்.. கேமராவுக்கு டாட்டா காட்டிய நகைக்கடை உரிமையாளர் -
நீதிபதி நேர்மையின்றி உத்தரவிட்டால்! அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது? உச்ச நீதிமன்றம் பளீர் -
நான் சொல்றேன்.. சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது.. அடித்து சொல்லும் அஸ்வினின் நண்பர்! -
வாடகை வீட்டில் உள்ளவர்.. எத்தனை வருடம் இருந்தால்.. வீட்டிற்கு உரிமை கொண்டாடலாம்? கோர்ட் போட்ட ஆர்டர் -
பாம்பு.. பாம்பு.. விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போதே.. சட்டென இப்படி சொல்லிட்டாரே.. கவனித்த மக்கள் -
அறிமுகம் இல்லாத ஆண்-பெண்கள் சேர்ந்து உல்லாசம்! இன்ஸ்டா-வில் பதிவு செய்து உள்ளே போன நிருபர்! அடுத்து? -
லட்சுமி மேனனின் மோசமான நிலைமை? அறை கதவை திறக்க முடியாமல் தட்டு தடுமாறி! சுயநல வலையில் நடிகை பரிதாபம் -
ஈரோடு தவெக பொதுக்கூட்டம் LIVE: கவர்மென்ட் நடத்துகிறார்களா? கண்காட்சி நடத்துகிறார்களா? விஜய் -
ஓசி ஓசி என சொல்லி அசிங்கப்படுத்துறாங்களா? நான் இருக்கேன்.. ஈரோட்டில் விஜய் பேச்சு -
பொங்கல் ரூ.100.. இட்லி ரூ.50.. ஈரோட்டில் குமுறும் தவெகவினர்... உணவுக்கு கைவிரித்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications