ஹெட் மாஸ்டர் ரூமில் கட்டிப்பிடித்து “உம்மா” – வாட்ஸப்பில் உலா வரும் குமரி பள்ளியின் மானம்
நாகர்கோவில்: குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் ஒரு ஆசிரியரும், ஆசிரியை ஒருவரும் கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று போலீஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப்பில் இன்று பரவியது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அறை. அங்கு இது வரை அப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களாக இருந்தவர்களின் பெயர் பட்டியல் எழுதப்பட்ட அறிவிப்பு பலகை. அதன் அருகே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கையெழுத்து போடும் பதிவேடு உள்ளது.

காலை நேரம். பள்ளியில் வகுப்பு தொடங்கும் முன்பு ஆசிரியர்கள் வரிசையாக வந்து தங்கள் வருகையை பதிவு செய்கிறார்கள்.
அப்போது ஒரு ஆசிரியை கையெழுத்திட தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகிறார். அவர் வந்த அடுத்த வினாடி ஒரு ஆசிரியரும் அங்கு வேகமாக வருகிறார். அவர் கையெழுத்திட வந்த ஆசிரியையை கட்டி அணைத்து முத்தம் இடுகிறார். அப்போது அங்கு இன்னொரு ஆசிரியர் வரும் சத்தம் கேட்கிறது.
கட்டி அணைத்த ஆசிரியர், ஆசிரியையை விடுவித்து விட்டு வேகமாக வெளியே செல்கிறார். இத்துடன் காட்சி முடிகிறது. சுமார் 42 வினாடிகளுக்கு இந்த காட்சி படமாக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கு வரும் குறிப்பிட்ட அந்த ஆசிரியரும், ஆசிரியையும் அடிக்கடி இது போன்று நடந்து கொள்வதை தெரிந்து கொண்ட ஒருவர் தான் இந்த காட்சியை மறைந்திருந்து படம் பிடித்து உள்ளார்.
இப்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருகிறது. இதனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வருவார்கள். அவர்களின் வருகை குறைந்த அளவிலேயே இருக்கும்.
இதனால் பள்ளி தலைமை ஆசிரியர் அறை பெரும்பாலும் ஆள் அரவமின்றி காணப்படும். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தியே அந்த ஆசிரியரும், ஆசிரியையும் தங்களின் லீலையை நிகழ்த்தி இருக்கலாம் என தெரிகிறது.
காரணம் ஆசிரியர், ஆசிரியையை கட்டி அணைக்கும் போது ஆசிரியை எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அதற்கு உடன்படுவது வீடியோ காட்சியில் தெளிவாக தெரிகிறது. எனவே இவர்களின் சில்மிஷ விபரம் தெரிந்தவர்களே இதை மறைந்திருந்து படம் பிடித்து இருக்கலாம் என தெரிகிறது.
இப்போது வாட்ஸ் அப் தகவல்களுக்கு மவுசு அதிகரித்து அதன்பேரில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதை அறிந்தே இந்த காட்சி போலீசாரின் வாட்ஸ் அப்பில் வெளியிடப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.
அதற்கேற்ப போலீசாரும் அந்த பள்ளி எங்குள்ளது என்பதை வீடியோ காட்சியில் உள்ள படங்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த காட்சிகள் உண்மையானது தானா? உள்நோக்கம் கொண்டதா? என்பது பற்றியும் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இது பற்றி போலீசார் கூறும்போது, கல்வி அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த வீடியோ காட்சிகள் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் கருத்துக்களை கேட்டபின்பே இதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications