திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியா? விஷால் அதிரடி!
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். நடிகர் விஷால் தனது ரசிகர் மன்றத்திற்கு "மக்கள் நல இயக்கம்" என பெயர் சூட்டியுள்ளார்.
இதற்கனா கொடி மற்றும் லோகவையும் விஷால் அறிமுகப்படுத்தியுள்ளார். அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகம் அவரது லோகோவில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு தெய்வங்கள்
இதைத்தொடர்ந்து விஷால் பேசியதாவது, நிஜ வாழ்க்கையில் நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகளே. நான் வணங்கும் இரண்டு தெய்வங்கள் அன்னை தெரசா, அப்துல்கலாம்.

அரசியலுக்காக அல்ல
மக்கள் நல இயக்கம்" அரசியலை நோக்கி செல்லும் இயக்கமல்ல. மக்கள் பணி செய்யவே இந்த புதிய அமைப்பு இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்தார்.

ஆலோசித்து முடிவு
இதைத்தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஷால் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

வேட்புமனு நிராகரிப்பு
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார் விஷால். ஆனால் கடைசி நேரத்தில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications