வெள்ளம் பாதித்த பாரிமுனை, எழும்பூர் மக்களுக்கு விஷால் உதவி!
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எழும்பூர், பாரி முனைப் பகுதி மக்களுக்கு நடிகர் விஷால் தனது ரசிகர் நற்பணி மன்றம் மூலம் உதவிகள் வழங்கினார்.

கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டித்தீர்த்தது. அரசு பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உதவிகளும் வழங்கப்படுகின்றன. இதுதவிர பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் தனது ரசிகர் மன்றம் மூலம், மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். கடலூர் மாவட்டம் புலியூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை மற்றும் நிதிஉதவிகளை வழங்கினார்.

சென்னையில் பாரிமுனை, எழும்பூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு, அரிசி மற்றும் நிதி உதவிகளை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மதிய உணவு மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications