For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலில் விழுந்து, திருமணம் செய்து கொண்ட கண் தெரியாத இசை ஜோடி

By Siva
Google Oneindia Tamil News

கடலூர்: பண்ருட்டி அருகே கண் தெரியாத காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரையூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). கண் பார்வையில்லாத அவர் பண்ருட்டி அருகே இருக்கும் புதுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக உள்ளார்.

அவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சங்கீதா(25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. சங்கீதாவுக்கும் கண் பார்வையில்லை. அவர் செங்கத்தில் உள்ள அரசு பள்ளியில் இசை ஆசிரியையாக இருந்தார்.

ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொண்டபோது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் என்று ஏராளமானோர் வந்திருந்தனர்.

English summary
Visually impaired lovers tied the knot on sunday near Panrutti. Both are working as music teachers in different government schools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X