சொந்த மண்ணில் பட்டத்தை பறிகொடுத்தார் செஸ் ஆனந்த்- கார்ல்சன் புதிய உலக சாம்பியன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடைபெற்ற செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை நார்வேயின் கார்ல்சனிடம் ஆனந்த் பறிகொடுத்தார்.

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. நடப்பு சாம்பியனான இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் இளம் வீரர் கார்ல்சனுடன் மோதினார்.

viswanathan anand and magnus carlsen

மொத்தம் 12 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியின் 9 சுற்று முடிவில் கார்ல்சன் 6 புள்ளிகள், ஆனந்த் 3 புள்ளிகள் பெற்று இருந்தனர்.

நேற்று 10 வது சுற்றுப் போட்டி நடைபெற்றது. 10வது சுற்று முடிவில் கார்ல்சன் 6.5 புள்ளிகள் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார். ஆனந்த் 3.5 புள்ளிகள் மட்டும் பெற்றார்.

இதன் மூலம் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் நார்வே வீரர் என்ற பெருமையை கார்ல்சன் பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு ரூ.8.40 கோடி பரிசாக வழங்கப்படும். ஆனந்துக்கு ரூ.5.60 கோடி வழங்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+