அதிமுகவினர் பணப் பட்டுவாடா: திமுகவின் வழக்கை ஹைகோர்ட் முடித்து வைத்தது
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை நேர்மையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்திடம் திமுகவினர் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று திமுக சார்பில் தஞ்சை லோக்சபா தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு அவசர மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யவதாக குறிப்பிட்டுள்ளார். பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். பலமுறை தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவும் டி.ஆர் பாலு கோரிக்கை விடுத்தார்.
இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்ரேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் பிற்பகலில் விசாரணைக்கு வந்தது
அப்போது, தேர்தல் முறைகேடு புகார்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், தேர்தல் ஆணையம் சரியான முறையில் செயல்பட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
-
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications