ஓட்டு போட வந்தவர் மனைவி, குழந்தைகள் கண் முன்பு சாலை விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே வாக்களிக்க வந்தவர் மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்பு சாலை விபத்தில் சிக்கி பலியானார்.
கந்தையன்(35) என்பவர் தனது மனைவி சோபியா, மகன்கள் ஜெகன், பிரதீப் ஆகியோருடன் பைக்கில் ஈரோட்டில் இருந்து சேலம் அயோத்யாபட்டினத்திற்கு இன்று காலை கிளம்பினார். அயோத்தியாபட்டினத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க தான் அவர் குடும்பத்தோடு சென்றார்.
அவரின் பைக் மகுடஞ்சாவடி அருகே சென்று கொண்டிருக்கையில் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கந்தையன் மனைவி, குழந்தைகள் முன்பு உயிர் இழந்தார்.
வாக்களிக்க சென்ற வழியில் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications