ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வுக்குப் பிறகு தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுக்காப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நேற்றோடு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவர்களோடு பா.ஜ.க.,வின் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தலைமை செயலகத்தில் சரி பார்க்கப்பட்டு, ஆர்.கே நகர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெறும்.

வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடைெபறும். இதையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டு சென்று ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்படும். இந்த வாக்குபதிவு மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதையடுத்து, வருகிற 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications