ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்காக தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வுக்குப் பிறகு தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுக்காப்பாக வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. நேற்றோடு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி தினகரன் ஆகியோர் இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவர்களோடு பா.ஜ.க.,வின் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன்னிலையில் தலைமை செயலகத்தில் சரி பார்க்கப்பட்டு, ஆர்.கே நகர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குபதிவு நடைபெறும்.

வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு வாக்குபதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடைெபறும். இதையடுத்து, வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டு சென்று ராணிமேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்படும். இந்த வாக்குபதிவு மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. இதையடுத்து, வருகிற 24ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications