சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி... நாகையில் பரிதாபம்
நாகை மாவட்டத்தில் மண்சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகிவிட்டனர்.
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர். காயமடைந்த ஒரு சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. திருவாவடுதுறையை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது மனைவி கார்த்திகா. இவர்களது மகள் சாதித்யா.

இவர்களது வீடு மண் சுவரால் ஆனது. இந்நிலையில் கனமழையால் சுவர் தண்ணீரில் ஊறி நேற்று இரவு இடிந்து விழுந்தது. இதில் வெங்கட்ராமன், கார்த்திகா மற்றும் சாதித்யா ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த சிறுமி வர்ஷினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications