For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு – காப்பாளர் மீது பாலியல் புகார்!

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு மைய காப்பாளர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காப்பகத்தில் உள்ள சிறுமிகளிடம் காப்பாளர் பிரபாகரன் தவறாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்துக் குழந்தைகள் நலக் குழும அதிகாரிகளிடம் காப்பகச் சிறுமிகள் எழுத்துப்பூர்வ புகார் அளித்தனர். அதில், மது அருந்திவிட்டு வந்து பாலியல் தொல்லை தருவதாக பிரபாகரன் மீது சிறுமிகள் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து குழந்தைகள் நலக் குழும அதிகாரிகள் காப்பகத்தில் நேரில் விசாரணை நடத்தினர்.

விசாரணையை அடுத்து காப்பாளர் பிரபாகரன் மீது வழக்குப் பதிய நலக் குழுமம் உத்தரவிட்டுள்ளது. நலக்குழும உத்தரவுப்படி வழக்கு பதிய திருச்சி கோட்டை மகளிர் காவல்நிலையம் மறுத்துள்ளதாகவும், புகார் தந்த சிறுமிகளை போலீஸ் மிரட்டுவதாகவும் குழந்தைகள் நல குழு அதிகாரி குற்றம் சாட்டியுள்ளனர்.

English summary
Orphanage warden misbehaved to the children in that orphanage in Trichy. Girls filed case about him into police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X