ஜெயலலிதா காவிரி விவகாரம் குறித்து ஆலோசித்த போது நோய் தொற்று ஏற்படவில்லையா?
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது பொய்யா என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியபோது அவருக்கு நோய் தொற்று ஏற்படவில்லையா என கேள்வி எழுந்துள்ளது. அல்லது காவிரி விவகாரம் குறித்து ஆலோசித்தார் என பொய் சொல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு லேசான காய்ச்சல்தான் என கூறப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் உள்ளார். அவர் காவிரி விவகாரம் குறித்து ஐஎஎஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறி அறிக்கை வெளியிடப்பட்டது.

எந்த நிலையில் சேர்க்கப்பட்டார் ஜெ.?
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு அவரசஅவசரமாக அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவ அறிக்கைகளை பெற்று, அவற்றை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா சுயநினைவற்ற நிலையில் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான நிலையில் ஜெ.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரால் யாருடைய குரளையும் உணர முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்த இந்திய மருத்துவ கவுன்சிலும் ஜெயலலிதா மோசமான நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என கூறியுள்ளது.

யாரும் அனுமதிக்கப்படவில்லை
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. கவர்னர், ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள், என பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவை பார்க்க வந்தனர்.

நோய் தொற்றால் அனுமதியில்லை
ஆனால் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சசிகலா மட்டுமே உடனிருந்தார். மற்றவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தால் நோய் தொற்று ஏற்படும் என்றும் என்பதால் யாருக்கும் அனுமதியில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

காவிரி விவகாரம் - ஆலோசனை
ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, காவிரி பிரச்னை தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக அதிகாரபூர்வமாக கூறப்பட்டது. அப்படி ஜெயலலிதா யாருடன் ஆலோசனை நடத்தினார்.

அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படவில்லையா?
அதில் பங்கேற்ற அதிகாரிகளின் பெயர் என்ன. நோய் தொற்று காரணமாக ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களை அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் காவிரி விஷயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் அனுமதித்தது எப்படி? அவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படவில்லையா என கேள்வி எழுந்துள்ளது.

ஆலோசனை என்றது பொய்யா?
அல்லது ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார் என கூறப்பட்டது பொய்யா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவ அறிக்கைகளின் முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications