மனிதர்களே, மனிதர்களே.. நாம கத்துக்கிறதுக்கு நிறைய இருக்கு இதுல.. வாங்க.. வந்து பாருங்க!
சென்னை: சில நேரங்களில் மனிதர்களை விட விலங்குகள் அதி புத்திசாலியாக இருக்கும். நாமெல்லாம் வெட்கிப்போகும் படி படு புத்திசாலிகளாக இருக்கும். அதில் நாய் முக்கியமானது.
சில நேரங்களில் நாய் என்று கூறுவேத கூட மரியாதைக்குறைவான வார்த்தையோ என்று நினைக்கும்படி நம்மை விட உயர்வான செயல்களில் ஈடுபட்டு நம்மை அசர வைப்பது இந்த நாய் இனம்.

இந்த வீடியோவைப் பாருங்கள். இதில் வரும் நாயின் செயலைப் பாருங்கள். அதை விட முக்கியமாக அந்த போக்குவரத்துக் காவலரைப் பாருங்கள். என்ன ஒரு அருமையான காட்சி இது.
எத்தனை பேருக்கு சாலையைக் கடப்பதில் பொறுமை இருக்கிறது இன்று. படபடவென சாலையின் குறுக்கே ஓடுவது, திடீரென கட் அடித்து தடாலென நடந்து கடப்பது என்று சாலையில் போகும் வாகனங்களை தடுமாற வைப்பவர்கள்தான் நம்மில் அதிகம்.
ஆனால் இந்த நாயைப் பாருங்கள், எவ்வளவு பொறுமையாக நின்று சாலையைக் கடக்கிறது. அதை விட அந்த நாய்க்காக போக்குவரத்தை நிறுத்தி அது பத்திரமாக சாலையைக் கடந்து செல்லும் அந்தக் காவலரைப் பாருங்கள்..
நம்ம சென்னையில்தான் இந்த அரிய காட்சி.
Do we need to say anything?Twitter: @vaidyavineet
Posted by Staring At Infinity on Saturday, August 1, 2015
இரண்டு பேருக்கும் இரண்டை கைகளையும் உயர்த்தி பெரிய சல்யூட் அடிக்கத் தோன்றுகிறதில்லையா...!












Click it and Unblock the Notifications