மற்றவர்களைப் பற்றி கவலையில்லை.. தினகரன் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் தடாலடி பதில்!

சசிகலா, டிடிவி தினகரன் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி பூசல் மீண்டும் சூடுபறக்க தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக தினகரன் அறிவித்துள்ளார்.

We are not bothering about TTV Dinakaran: Jayakumar

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் அதிமுக அம்மா அணி நிர்வாகிகளுடன் இன்று அதிமுக தலைமைக் கழகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் மற்றவர்களைப் பற்றி கவலையில்லை என தடாலடியாக பதிலளித்தார்.

கட்சி விவகாரம் தொடர்பாக சசிகலா மற்றும் டிடிவி தினகரன் நிலைப்பாட்டில் தாங்கள் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறினார். கட்சியையும் ஆட்சியைம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் வழிநடத்துகிறார் என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே சசிகலாவையும் டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+