நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம்: கமல் ட்விட்டரில் பதிவு
நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம் என நடிகர் கமல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை: நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீற கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல் கடந்த சில மாதங்களாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் ரீதியாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்தக்கூடாது.
சட்டம் ஒழுங்கு சீர் குலையும் வகையில் ஆர்பாட்டம் நடத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
We made justice system.Use it correct it.We can.Do not insult & abuse it.Our constitution, is robust enough 2 take all debates.Bring it on
— Kamal Haasan (@ikamalhaasan) September 8, 2017
இதுகுறித்து நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நீதிமன்றத்தை அவமதிக்க கூடாது, நீதிமன்ற உத்தரவை மீற கூடாது. நீதித்துறையை சரியாக பயன்படுத்துவோம். நம்மால் முடியும். அரசியலமைப்புக்கு உட்பட்டு எல்லாத்தையும் விவாதிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் கமல்.