சுட்டுப்பொசுக்க தமிழக மீனவர் உயிர் என்ன கிள்ளுக் கீரையா? - கொந்தளிப்பில் ராமேஸ்வரம்
மீனவர்களின் உயிர் கிள்ளுக்கீரையா என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கொந்தளிப்புடன் கேட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்: தமிழக மீனவர் ஒருவர் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் உயிருக்கு பாதுகாப்பில்லையா? எங்களின் உயிர் அவ்வளவு அற்பமானதா என்று கொந்தளிப்புடன் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இலங்கை சிங்கள வெறிப்படை மீண்டும் தனது ரத்த வெறியாட்டத்தை ஆரம்பித்துள்ளது. கடற்பகுதியில் தாக்குதல் நடத்தி படகுகளை பறித்து சென்ற இலங்கை கடற்படையினர், இப்போது இந்திய கடல் எல்லைக்குள்ளேயே புகுந்து ஒரு மீனவரின் உயிரைப் பறித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் சில தினங்களாக தமிழக மீனவர்களை கைது செய்து வருகின்றனர். இலங்கை சிறையிலும் அடைத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கச்சத்தீவில் விழா நடைபெற உள்ள நிலையில் விழாவை புறக்கணிப்போம் என்றும் மீனவர்கள் யாரும் செல்லக்கூடாது என்றும் ராமேஸ்வரம் கேட்டுக்கொண்டனர். பாம்பன் விசைப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர் சுட்டுக்கொலை
இந்தநிலையில் நேற்றிரவு இந்திய எல்லைப்பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்சோ,22 என்ற மீனவர் உயிரிழந்தார். ஒரு மீனவர் பலத்த காயமடைந்தார். இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மிகுந்த கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

நிரந்தர தீர்வு
செய்தியாளர்களிடம் பேசிய விசைப்படகு மீனவர்கள் சங்க தலைவர் ஜேசுராஜ், மீனவர் பிரச்னைக்கு இந்திய அரசு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய அரசு மௌனம் சாதிக்காமல் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மனித உயிருக்கு மதிப்பில்லையா?
விலங்குகளைக் கொன்றால் கூட அவர்களைப் பிடித்து சிறையில் போடுகின்றனர். ஆனால் மனிதர்களை குறிப்பாக மீனவர்களைக் கொன்றால் கண்டுகொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டினார். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டார். கடல்பகுதியில் எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2000 பேர் பாதிப்பு
கடந்த 2011ஆம் ஆண்டு இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டால் காரைக்கால் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளனர். 2000ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எராளமான மீனவர்கள் மாயமாகியுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கையின் ரத்த வெறி தொடர்ந்து வருகிறது. அதன் தொடர்ச்சியா ராமேஸ்வரம் மீனவர் சுடப்பட்டுள்ளார் என்றும் மீனவர்கள் சங்க தலைவர் ஜேசுராஜ் கொந்தளிப்புடன் கூறியுள்ளார். எங்களின் உயிருக்கு பாதுகாப்பும், நிரந்தர தீர்வும் வேண்டும் என்பதே மீனவர்களின் வலியுறுத்தல்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications