1987-ல் ஜெ.வை பெங்களூருக்கு விரட்ட சதி நடந்தது.. நாங்கதான் காப்பாற்றினோம்: தினகரனின் அடடே பேட்டி
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பெங்களூருக்கு விரட்ட பலர் முயற்சி செய்ததாகவும் தங்களது குடும்பமே அவரை பாதுகாத்ததாகவும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்
சென்னை: எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவை பெங்களூருவுக்கு விரட்ட பலர் முயற்சி செய்ததாகவும் அப்போது தங்களது குடும்பம்தான் அவரை பாதுகாத்தது என்றும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அதிமுக துணைப்பொதுச் செயலளார் டிடிவி.தினகரன் கலந்துகொண்டார். அப்போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து நெறியாளர் பாண்டே கேள்வி எழுப்பினார்.

தவறான விமர்சனங்கள்
அதற்கு பதிலளித்த டிடிவி.தினகரன் தவறான விமர்சனங்கள் தங்கள் மீது வைக்கப்படுவதாக கூறினார். பதில் சொல்ல வேண்டிய விமர்சங்களுக்கு மட்டும் பதில் அளிப்போம் என்றும் தினகரன் தெரிவித்தார்.

அப்ப இருந்தே...
குறிப்பாக அரசியல் விமர்சனங்களுக்கு தான் விளக்கமளித்து வருவதாகவும் அவர் கூறினார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா முழுவதுமாக கட்சிப் பணியை தொடங்கியதிலிருந்தே தங்கள் குடும்பத்தினர் அவருடன் இருந்து வருவதாகவும் தினகரன் தெரிவித்தார்.

பெங்களூருக்கு விரட்ட
மேலும் பல எதிரிகளும் எதிர்கட்சியினரும் ஜெயலலிதாவை பெங்களூருக்கு விரட்ட திட்டமிட்டனர். தமிழகத்தை விட்டு வெளியேற்ற திட்டமிட்டனர். அப்போது நாங்கள் தான் அவருக்கு பாதுகாப்பு அளித்தோம் என்றும் தினகரன் கூறியுள்ளார்.

திவாகரன், நடராஜன்
ஏற்கனவே தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் அதிமுகவை காப்பாற்றியது என தினகரனின் மாமா திவாகரன் கூறியிருந்தார். அதேபோல் தினகரனின் சித்தப்பா நடராசன், நாங்கள்தான் அதிமுகவை காப்பாற்றினோம். என் மனைவிதான் ஜெயலலிதாவை தோளில் சுமந்தார். அதனால் குடும்ப அரசியல் செய்வோம் என பகிரங்கமாக பேசி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications