அப்பவே இதை செய்திருந்தால் இந்நேரம் அன்புமணி 2வது முறையாக முதல்வர் ஆகியிருப்பார்: ராமதாஸ்
விழுப்புரம்: அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுங்கள் என்று தமிழக மக்கள் தெரிவித்தனர். அவர்களின் பேச்சை கேட்டே தற்போது தனித்து போட்டியிடுகிறோம். இதை 15 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் இந்நேரம் அன்புமணி 2வது முறையாக முதல்வர் ஆகியிருப்பார் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ராஜசேகரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,

தேர்தல் ஆணையம்
இனி வரும் காலங்களில் வேட்பாளர்களுக்கான துண்டறிக்கை, சுவரொட்டி உள்ளிட்டவற்றை தேர்தல் ஆணையமே அச்சடித்து வழங்கி அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

குடிகார நாடு
தமிழக மக்கள் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாறி, மாறி ஓட்டு போட்டனர். அதன் காரணமாக தமிழ்நாடு குடிகார நாடாக ஆகியுள்ளது. அதிமுக, திமுகவுடன் நாங்கள் மாறி, மாறி கூட்டணி வைத்தோம்.

தனித்து போட்டி
அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுங்கள் என்று தமிழக மக்கள் தெரிவித்தனர். அவர்களின் பேச்சை கேட்டே தற்போது தனித்து போட்டியிடுகிறோம். இதை 15 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருந்தால் இந்நேரம் அன்புமணி 2வது முறையாக முதல்வர் ஆகியிருப்பார்.

விவசாயிகள்
அதிமுக ஆட்சியில் 2 ஆயிரத்து 423 விவசாயிகளும், திமுக ஆட்சியில் 3 ஆயிரத்து 390 விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி செலவில் நீர்ப்பாசன திட்டத்தை பாமக செயல்படுத்தும். அதிமுகவும், திமுகவும் ரூ.4 ஆயிரம் கோடி மற்றும் ரூ.3 ஆயிரம் கோடியை பதுக்கி வைத்து வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றன.












Click it and Unblock the Notifications