ஆர்.கே.நகரில் திமுகவிற்கு காங்கிரஸ் ஆதரவு - திருநாவுக்கரசர்
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பளாருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் தனித்தனியாக போட்டிய உள்ளனர். இந்த தொகுதியில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக திமுக போட்டியிட்டுள்ளது.

இந்த தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பது பற்றி அரசியல் கட்சிகள் இன்னும் தினங்களில் அறிவிக்க உள்ளன. இது பற்றி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளதால் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறினார். திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
நெடுவாசலில் மக்கள் போராடி வருகின்றனர். மக்களின் ஆதரவு இன்றி நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடியாது என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications