தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் - தினகரன்
குரங்கு கையில் மாட்டிக் கொண்ட பூமாலையாக அதிமுக சிக்கிவிட்டது என்று தினகரன் குற்றம்சாட்டினார்.
Recommended Video

சேலம்: இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பால் குரங்கு கையில் மாட்டிக் கொண்ட பூமாலையாக அதிமுக சிக்கிவிட்டது என்று தினகரன் குற்றம்சாட்டினார். மேலும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம், கட்சி, கொடி ஆகியவை எடப்பாடி- பன்னீர் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பு அளித்தது. இதுகுறித்து சேலத்தில் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை. இந்த தீர்ப்பே அதற்கு சிறந்த உதாரணம். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. 122 எம்எல்ஏக்கள், 37 எம்.பிக்கள் இருந்தபோது அப்போது இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
தற்போது அவர்களுக்கு 111 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி- ஓபிஎஸ் அணிக்கு வழங்கிவிட்டது. அன்று பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அரசு இன்று எடப்பாடிக்காக செயல்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த தீர்ப்பால் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் அவர்கள் கையில் அதிமுக சிக்கிக் கொண்டது. ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டால் நான் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications