Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ப்ளூ வேல் யார் விளையாடினாலும் உடனே தகவல் கொடுங்க - சேலம் ஆட்சியர் ரோகினி

சேலம் மாவட்டத்தில் ப்ளூ வேல் விளையாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சேலம்: டீன் ஏஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டைத் தடுக்க சேலம் மாவட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களாக ப்ளூ வேல் ஆன்லைன் விளையாட்டு குறித்த மரண செய்திகள் பரவி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

We will take steps stop blue whale game says Salem collector Rohini

அப்போது அவர் கூறுகையில், சேலத்தில் ப்ளூ வேல் விளையாட்டை விளையாடுவோர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப் குரூப்கள் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் சேலம் மாவட்டம் முழுக்க உள்ள கணினி சென்டர்கள் முழுமையாக கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

யார் ப்ளூ வேல் விளையாடுகிறார்கள் என்பதை தெரிந்தவர்களும் போன் மூலம் தகவல் அளிக்கலாம். வீட்டில் குழந்தைகள் அல்லது பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் யாராக இருந்தாலும் அவர்கள் ப்ளூ வேல் விளையாடுகிறார்கள் என்று தெரிந்தால் சைல்டு ஹெல்ப் லைன் எண் - 1098 க்கு அழைத்து புகார் தரலாம்.

புகாரின் பெயரில் கேம் விளையாடும் நபர்களுக்கு உரிய மன நல ஆலோசனைகள் வழங்கப்படும்." என்று தெரிவித்தார். இதனிடையே புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், அஸ்ஸாம் மாநில மாணவர் ஒருவர் ப்ளூ வேல் விளையாட்டால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+