விரைவில் தூத்துக்குடி மக்களை சந்திப்போம்.. அமைச்சர் ஜெயக்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விரைவில் தமிழக அமைச்சர்கள் குழு தூத்துக்குடி சென்று மக்களை சந்திக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தூத்துக்குடிக்கு இதுவரை எந்த அமைச்சரும் செல்லவில்லை. முதல்வர் போகவில்லை. முக்கிய அமைச்சர்கள் போகவில்லை. மூத்த அதிகாரிகளும் கூட இதுவரை தூத்துக்குடியை எட்டிப் பார்க்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

We will visit Tuticorin soon, says Minister Jayakumar

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடிக்கு நாங்கள் செல்வோம். அமைச்சர்கள் குழு விரைவில் செல்வோம். அங்கு மக்களை சந்திப்போம்.

ஸ்டெர்லைட் ஆலை கூடாது என்பதே அம்மா காலத்திலிருந்து எங்களது நி்லைப்பாடு. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கோர்ட்டிலும் கூட இதையே கூறியுள்ளோம். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாக தற்போது மின் இணைப்பும் கூட துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே நாங்களும் மக்களுடன்தான் இருக்கிறோம்.

மக்களுடையே உணர்வுதான் எங்களது உணர்வும். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. மக்கள் உணர்வுக்கு எதிரான எதையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்றார் ஜெயக்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+