'வெற்றி நமதே' (யாருக்கு?) என்கிறார் அழகிரி!
மதுரை: மதுரையில் வாக்களித்த மு.க. அழகிரி வெற்றி நமதே என்று சூசகமாக சொல்லி செனஅறார்.
தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், மதுரை எம்.பி.யுமான மு.க.அழகிரி, பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி இருந்தார். இன்று காலை 10 மணி அளவில் மு.க.அழகிரி குடும்பத்துடன் முத்துப்பட்டி மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு வந்தார்.
அங்கு அவர் தனது வாக்கை அளித்து விட்டு வெளியே வந்தார். அவரிடம் தேர்தல் முடிவுகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘வெற்றி நமதே' என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனிடையே வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரம் தள்ளி நின்றுக்கொண்டிருந்த மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் மூலம் வெற்றி நமதே என்பதன் அர்த்தம், பாஜக கூட்டணியை மதுரையில் வெற்றிபெறச் செய்வதுதான்போல என அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பேசிக்கொண்டனர்.