மந்த்ராலயா மடாதிபதியிடம் ரஜினி என்ன பேசினார்?- வீடியோ
மந்த்ராலயத்தில் மடாதிபதியிடம் ரஜினி என்ன பேசினார் என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video

அமராவதி: மந்த்ராலயத்தில் சுவாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் அதன் மடாதிபதியிடம் என்ன பேசினார் என்பது குறித்த விவரங்கள் தற்போது வீடியோவில் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ளது மந்த்ராலயம். இங்கு ராகவேந்திரருக்காக ஒரு கோயில் உள்ளது. ரஜினிகாந்தின் இஷ்ட தெய்வமும் இவர்தான்.

இந்நிலையில் இன்று திடீரென மந்த்ராலயத்துக்கு வந்த ரஜினிகாந்த், அங்குள்ள ராகவேந்திரரை வழிபட்டார். பின்னர் அவர் மடாதிபதியிடம் ஆசி பெற்றார். அப்போது மடாதிபதி ரஜினியிடம் பேசும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் மடாதிபதி ரஜினியிடம், நீங்கள் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அப்படியே இந்த மடத்தில் செய்யப்படும் நற்பணிகளையும், சம்ஸ்கிருத பள்ளி, கோசாலை, பாடசாலை ஆகியவற்றை பார்வையிட்டால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும், பணி நிமித்தமாக அவசரமாக எங்காவது செல்கிறீர்களா என்கிறார்.
அதற்கு ரஜினி , அவசரம் எல்லாம் இல்லை. நான் வேறு ஒரு இடத்துக்கு போக வேண்டும். பொதுமக்கள் கூடுவதற்குள் நான் செல்ல வேண்டும் என்றார். அதற்கு மடாதிபதியோ சரி, நீங்கள் ஃப்ரீயாக இருக்கும் போது இங்கு வந்து நற்பணிகளை பார்வையிடுங்கள் என்கிறார்.












Click it and Unblock the Notifications