தமிழக பாஜகவில் சூடுபிடிக்கும் ஆருத்ரா மோசடி..ஹரீஷ் முதல் நடிகர் ஆர்.கே. சுரேஷ் வரை சிக்கியது எப்படி?
சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தற்போது சூடு பிடித்து வருகிறது. பாஜக நிர்வாகிகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஏற்கெனவே கைதானவர்களின் வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை ஒரு பிளாஷ்பேக்காக பார்ப்போம்.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆருத்ரா எனும் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமையிடம் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கூறியிருந்தனர்.

இதை நம்பி லட்சக்கணக்கானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் அந்த நிறுவனமோ முதலீட்டாளர்களுக்கு சொன்னது போல் பணத்தை திரும்பச் செலுத்தவில்லை. இதையடுத்து முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் கூறினர்.
ஆசியம்மாள் விசாரணை: இந்த வழக்கு தொடர்பாக ஐஜி ஆசியம்மாள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். சுமார் 1,09,255 பேர் ரூ 2438 கோடி வரை முதலீடு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக 11 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரீஷ் கடந்த மாதம் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
பணம் கொடுத்த ஹரீஷ் : அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரீஷ், தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தது வெளியானது. பணம் கொடுத்ததால்தான் ஹரீஷுக்கு பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மாநிலச் செயலாளராக இருந்தார். அந்த பொறுப்பை பெறுவதற்கு பாஜகவை சேர்ந்த சிலருக்கு மோசடி பணத்திலிருந்து ஹரீஷ் பங்கு கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பகீர் கிளப்பிய ஹரீஷ்: இதன் காரணமாக பணம் பெற்ற பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அலெக்ஸ் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக உள்ளார். சுதாகர் ராணிப்பேட்டை பாஜக நிர்வாகியாகவும் உள்ளனர். கைது செய்யப்பட்ட ஹரீஷிடம் விசாரணை நடத்தியதில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.
பணம் பெற்றது உண்மையா: அலெக்ஸ், சுதாகர் ஆகியோருக்கும் பணம் கொடுத்ததாக ஹரீஷ் ஒப்புக் கொண்டார். இதன் அடிப்படையில் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து அலெக்ஸ் விசாரணைக்கு ஆஜரானார். சுதாகரிடம் விசாரித்ததில் தான் பணம் பெற்றது உண்மைதான் என்றும் பதவி வழங்குவதற்காக பணம் வாங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஆர்.கே சுரேஷுக்கும் தொடர்பு: நடிகரும் தயாரிப்பாளருமான பாஜகவை சேர்ந்த ஆர்.கே.சுரேஷ் ரூ 15 கோடி பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அவருக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவருடைய செல்போனும் கடந்த 2 மாதங்களாக ஸ்விட்ச் ஆப் ஆனதாக சொல்லப்பட்டது. அவரை தனிப்படை போலீஸார் தேடி வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஆயிரம் கோடி மோசடி: இந்த நிலையில் நேற்றைய தினம் மைக்கேல் ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் மைக்கேல் ராஜ், ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் உள்ள அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாண்டவர் என தெரியவந்தது. துபாய்க்கு தப்பி செல்ல இருந்த நிலையில் அவர் கைதானார். ரூ 1749 கோடி ரூபாய் பொதுமக்களிடம் வாங்கி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணப்பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இன்றைய தினம் பாஜகவிலிருந்து வெளியான மாநில நிர்வாகி கிருஷ்ணபிரபு பல்வேறு பரபரப்பு தகவல்களை கூறிவிட்டு வெளியேறியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
-
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
வரிசையாக காலை வாரும் தலைவர்கள்.. காங்கிரஸுக்கு விழுந்த மரண அடி.. இப்படியே போன தோல்வி உறுதி! -
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லை! ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நடிகை! கேரளாவில் NDA சொதப்பல் -
புதுச்சேரியில் மார்ட்டின் மகனால் தெறித்து ஓடும் பாஜக? ரங்கசாமி போட்ட சைலண்ட் ஸ்கெட்ச்.. அப்போ விஜய் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
30 தொகுதிகளின் பட்டியல்.. அதிமுக கோட்டையை கேட்கும் பாஜக.. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதன் பின்னணி! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications