Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்ப ஆனந்தன் மீதான இந்தப் புகாரையெல்லாம் காக்கா தூக்கிப் போச்...?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் அமைச்சராகியுள்ளார் எம்.எஸ்.எம். ஆனந்தன். ஆனால் இவர் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு சில பரபரப்புக் காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் அந்தப் புகாரெல்லாம் தற்போது என்னவானது என்பதுதான் புரியவில்லை.

ஓ.பன்னீர் செல்வம் முதல்வராவதற்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ஆனந்தன். ஜெயலலிதா சிறைக்குச் சென்ற பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வரானபோது இவரும் அமைச்சராக தொடர்ந்தார்.

ஆனால் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானபோது இவர் மட்டும் விடுபட்டார். மற்ற அமைச்சர்களை மீண்டும் எடுத்துக் கொண்டார் முதல்வர் ஜெயலலிதா. ஆனந்தன் மட்டும் நீக்கப்பட என்ன காரணம் என்பது அப்போது பகிரங்கமாக தெரிவிக்கப்படவில்லை.

பெண் அளித்த புகார்

பெண் அளித்த புகார்

இருப்பினும் இதுதான் காரணமாக இருக்க முடியும் என்று அனுமானிக்கும் அளவுக்கு சில விஷயங்கள் வெளிப்படையாக தெரிந்தன. ஆனந்தன் மீது ஜெயமணி என்ற பெண் கொடுத்த பரபரப்பு புகார்கள் அதில் ஒன்று.

பரபரப்புப் புகார்

பரபரப்புப் புகார்

ஜெயமணி அதிமுகவில் இருந்தவர். அவர் ஆனந்தன் மீது பரபரப்பு புகார்களை ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். அவர் கூறியதாக ஜூனியர் விகடன் சொன்ன செய்தியில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கும் எனக்கும் நெருக்கமான பழக்கம் இருந்துச்சு. அப்போ, அமைச்சர் மேல கார்டனுக்கு நிறைய புகார் போயிட்டு இருந்துச்சு. அந்தப் புகார் எல்லாம் அம்மா கவனத்துக்குப் போகாம இருக்க கார்டன்ல இருக்குற ஒருத்தரை அட்ஜெஸ்ட் செய்யணும்னு மிரட்டினார். நான் அதுக்கு ஒத்துக்கலை. அதனால என்னை அடிச்சு சித்ரவதை செஞ்சார். போற இடத்துல எல்லாம் என்னை அவமானப்படுத்தினார். எல்லாத்துக்கும் மேல என்னை கட்சியில இருந்து நீக்கவும் செஞ்சுட்டார். சேர்ந்து பிசினஸ் செய்யலாம்னு என்கிட்ட ஒரு கோடி ரூபாயை வாங்கிட்டு ஏமாத்திட்டார்" என்று பகிரங்கமாக கூறியிருந்தார் ஜெயமணி.

சொத்துப் பட்டியலை வெளியிடப் போவதாக மிரட்டல்

சொத்துப் பட்டியலை வெளியிடப் போவதாக மிரட்டல்

மேலும் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரைக்கும் புகார் அளித்தார் ஜெயமணி. இருப்பினும் அது கண்டுகொள்ள்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனந்தனிடம் ரூ. 400 கோடி அளவுக்கு சொத்து உள்ளது. அந்தப் பட்டியலை வெளியிடுவேன் என்று கூட கூறிப் பார்த்தார் ஜெயமணி. அப்போதும் அனந்தன் மீது நடவடிக்கை பாயவில்லை.

ஜெயலலிதா வந்ததும்

ஜெயலலிதா வந்ததும்

இந்த நிலையில்தான் ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். அப்போது ஆனந்தன் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. அவர் மீதான ஜெயமணியின் புகார்களும், கட்சியினர் தரப்பில் வந்த புகார்களுமே ஆனந்தன் பதவியிழக்க காரணம் என்று அப்போது கூறப்பட்டது.

மீண்டும் அதே துறை

மீண்டும் அதே துறை

முன்பும் வனத்துறை அமைச்சராகத்தான் இருந்தார் ஆனந்தன். தற்போது மீண்டும் அதே வனத்துறையையே பெறுகிறார். திருப்பூர் வடக்குத் தொகுதியில் இருந்து தமிழக சட்டசபைக்கு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்ட எம்.எஸ்.எம் ஆனந்தன் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். திருப்பூர் அதிமுக மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார்.

புகார் என்னாச்சு

புகார் என்னாச்சு

ஆனந்தன் மீது அவ்வளவு பெரிய புகார்கள் குவிந்த நிலையில் அதன் பின்னணியில் அவர் அமைச்சர் பதவியை இழந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் அமைச்சராகியிருப்பதால் அவர் மீதான புகார்கள் என்னவாயின என்ற கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+