திமுகவினர் இதயத்தில் இடியை இறக்கிய காவேரி மருத்துவமனையின் 7வது அறிக்கை
7-வது அறிக்கை என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு கடைசியில் பெரும் சோகத்தில் முடிந்து விட்டது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்த காவேரி மருத்துவமனையின் 7வது அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் அது பெரும் சோகத்தில் அத்தனை பேரையும் மூழ்கடித்துள்ளது.
நேற்று மாலை 6 மணி அளவில் வைக்கப்பட்ட 24 மணி நேர கெடு முடிவில் அந்த அறிக்கை வெளியானது. கருணாநிதிக்கு கடும் முயற்சி எடுத்து தீவிர கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.
ரத்த அழுத்தம் குறைகிறது, இதய துடிப்பு குறைகிறது என்ற தகவல்கள் ஒரு புறம் புரட்டி எடுத்தன. மற்றொரு புறம் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வரை சந்தித்துவிட்டு வந்தார்.
இதெல்லாம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே தொடர்ந்து கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அந்த 7-வது அறிக்கைதான் நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் இருந்தனர். ஆனால் அது கடைசியில் இதயத்தில் இடியை இறக்கி விட்டுள்ளது.
மருத்துவமனை வெளியிட்ட அந்த அறிக்கையில், கடந்த சில மணி நேரங்களாகவே கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதனால் அவர் தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் மிகுந்த சிகிச்சை அளித்த போதிலும் முக்கிய உறுப்புகளின் செயல்பாடு மோசமடைந்து வருகிறது என்றும் மருத்துவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.