சசிகலாவின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது!
சசிகலாவின் அடுத்த திட்டம் என்ன என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
Recommended Video

சென்னை: இருந்த கடைசி நம்பிக்கையும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம் சசிகலாவை விட்டு சென்று விட்டது.
ஜெயலலிதா இறந்ததிலிருந்தே சசிகலாவிற்கு சோதனை மேல் சோதனை. எதிர்பார்த்தது ஒன்று.. நடந்து முடிந்தது வேறொன்றாகி.. இறுதியில் சொத்துக் குவிப்பு வழக்குக்காக சிறைக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் அவரது சார்பாக டிடிவி தினகரன் இழுத்து பிடித்து அமமுகவை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்.

மொத்தம் சறுக்கலே
இக்கட்டான, முக்கியமான, நெருக்கடியான நிலைமை ஏற்படும்போதெல்லாம் பெங்களூரு சென்று சசிகலாவுடன் ஆலோசனையும் நடத்தி வந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா மறைந்து அமமுகவுக்கு ஒரே ஒரு சாதகமாக அமைந்தது ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு மட்டுமே. அதன்பிறகு எல்லாமே சறுக்கல். கருணாநிதி இறந்து நாடே சோகத்தில் மூழ்கியிருந்தபோது, முதல் ஆளாக, திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சென்று களப்பணியில் தீவிரமாக இறங்கியது தினகரன் மட்டுமே.

கோர்ட்டுக்கு போகிறேன்
இதற்காக தம் கட்சி சார்பாக ஒருசிலரை அந்தந்த தொகுதிகளிலும் முகாமிட செய்து வேலை பார்க்க வைத்தார். ஆனால் ரெட் அலர்ட் எனும் அரசியல் எல்லா தேர்தல் ஏற்பாடுகளையும் மழைநீரில் அடித்து செல்ல வைத்தது. இடைத்தேர்தல்களும் தள்ளி போனது. இதனால் மிகுந்த வருத்தமும், ஆத்திரமும் அடைந்த டிடிவி, இது சம்பந்தமாக கோர்ட்டுக்கு போக போகிறேன் என்று கூட சொன்னார்.

தங்க.தமிழ்ச்செல்வன்
அதேபோல 18 எம்எல்ஏக்களும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிசலாவை நம்பிதான் இருந்து வருகிறார்கள். எத்தனையோ முறை சசிகலாவை சிறை சென்று பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தும் டிடிவி அவர்களை அழைத்து செல்லவே இல்லை. தங்க.தமிழ்செல்வனுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.

பரோலில் இளவரசி
இழுபறியாகவே நீடித்து வந்த இந்த தீர்ப்பு, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் டிடிவி பெங்களூர் சென்று ஆலோசனையும் பெற்று, ஆதரவு எம்எல்ஏக்களை அழைத்து குற்றாலத்திலும் தங்க வைத்தார். இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்று சசிகலா, தினகரன் தரப்பு அதிகமாகவே நம்பியதாம். அதற்காகத்தான் இளவரசி பரோலுக்கு ஏற்பாடு நடந்தது.

உற்சாகம், நம்பிக்கை
தீர்ப்பு சாதகமாக வரும்போது யாராவது ஒருவர் கூட இருக்க வேண்டும் என்றும், அப்படி சாதகமாக வரும்பட்சத்தில் நம் தரப்பு ஆட்களை ஆளும் கட்சி இழுத்து வளைத்து போட்டு கொள்ளவும் வாய்ப்பு இருப்பதால், ஒருவர் வெளியே இருக்க வேண்டும், அப்போதுதான் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் வரும் என்று கருதப்பட்டது.

காதுவலி ஆபரேஷன்
அதன் அடிப்படையில்தான் இளவரசிக்கு பரோல் நடவடிக்கையும் ஆரம்பமானது. அதனடிப்படையில் இளவரசிக்கு காது வலிக்கு ஆபரேஷன் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரை தீர்ப்பு சம்பந்தமாக சசிலா, தினரகன் தரப்பினர் நம்பிக்கையுடன்தான் இருந்தனர். ஆனால் தற்போது பாதகமான தீர்ப்பினை அடுத்து அமமுக என்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை.

எம்எல்ஏக்கள் நிலை?
பரோலில் வரும் இளவரசி ஆதரவு எம்எல்ஏக்களிடம் என்ன பேச போகிறார், எப்படி நம்பிக்கை அளிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தொடர் சறுக்கலால் 18 எம்எல்ஏக்களும் இனியும் அமமுகவில் தொடர்வார்களா? என்பதை இனி தான் பார்க்க வேண்டும்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications