எத்தனை பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி?
ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தை குற்றவாளி என்று செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Recommended Video

செங்கல்பட்டு : ஹாசினியை படுகொலை செய்த வழக்கில் தஷ்வந்த் மீது கொலை , ஆள்கடத்தல், தடயத்தை மறைக்க முயற்சித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்துள்ளார்.

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி காலை முதலே செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கூட்டம் கூடியது. 12 மணியளவில் தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மதியம் 3 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மதியம் 3 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். அப்போது தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என்று அறிவித்தார். அவர் மீது கொலை , ஆள் கடத்தல் , தடயங்களை மறைக்க முயற்சித்தல் உள்ளிட்ட வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
சி.ஆர்.பி.சி 201, 202, 354, 363, 366 ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. குழந்தைக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 35 பேரிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன. தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தஷ்வந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications