For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்போ எல்லாமே பக்கா ப்ளானிங்தானா!... அபிராமியின் இந்த மெசேஜ் சொல்வது என்ன?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபேஸ்புக்கில் குன்றத்தூர் அபிராமி பகிர்ந்த கணவர் பற்றிய கதை- வீடியோ

    சென்னை: அபிராமியின் பேஸ்புக்கில் கடந்த 28-ஆம் தேதி கடைசியாக சொல்லப்பட்ட பதிவை பார்க்கும் போது இவர் ஏதோ ஆத்திரத்தில் குழந்தைகளை கொலை செய்யவில்லை என்பதும் எல்லாமே பிளானிங்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

    குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த அபிராமி. திருமணத்துக்கு முன்பு வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இதனால் அழகை பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்.

    அடிக்கடி ப்யூட்டி பார்லர் செல்வதும் தன் அழகை மேம்படுத்தி கொள்வதும் அதை பார்த்து விட்டு யாராவது பாராட்ட வேண்டும் என நினைப்பதுமே அபிராமியின் நோக்கமாக இருந்துள்ளது.

    அறிமுகம்

    அறிமுகம்

    அழகு எப்போதும் ஆபத்து என்பதை அறியாத அபிராமி நாளடைவில் டப்ஸ்மாஷ் செய்து அசத்தியுள்ளார். இதனால் பேஸ்புக்கில் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்துள்ளனர். இந்நிலையில் பிரியாணி கடையில் பணிபுரிந்த சுந்தரமும் பேஸ்புக்கில் அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது.

    சுந்தரத்தை மறக்க முடியவில்லை

    சுந்தரத்தை மறக்க முடியவில்லை

    இதையடுத்து சுந்தரத்துக்கும் அபிராமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. விவரம் தெரிந்த கணவர் மற்றும் குடும்பத்தினர் அபிராமியை வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இதனால் அவரால் சுந்தரத்தை மறக்க முடியவில்லை.

    நம்பலாம்

    நம்பலாம்

    சுந்தரத்துடன் சேர்ந்து வாழ்வதற்காக இரு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றுள்ளார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்காதல் மீது கொண்ட திடீர் வெறி காரணமாக அவர் குழந்தைகளை கொன்றுவிட்டதாக நம்பப்படுகிறது.

    வாசகம்

    ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட சம்பவம் என அவரது பேஸ்புக் பதிவு சொல்லாமல் சொல்கிறது. அவர் கொலை செய்தது ஆகஸ்ட் 30-ஆம் தேதி. ஆனால் 28-ஆம் தேதியே தனது பேஸ்புக்கில் யார் என்ன சொல்வார்கள் என கவலைப்படாதீர், உங்களுக்கு பிடித்தமான வழியில் வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கி கொள்ளுங்கள் என்று அந்த வாசகத்தில் இடம்பெற்றுள்ளது.

    வேறு ஆதாரம்

    வேறு ஆதாரம்

    இதை பார்க்கும் போது ஏதோ ஜஸ்ட் லைக் தட் என்பது போல் அவர் பதிவு செய்யவில்லை என்றே தெரிகிறது. எல்லாமே திட்டமிட்டப்படியே நடந்துள்ளதற்கு இதை விட வேறு ஆதாரம் என்ன வேண்டும்?

    English summary
    Kundrathur Abirami gives message that means Never care what others say, Enjoy the life in ur way.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X