வேட்பு மனு வாபஸ் முடியும் வரை கூட்டணி பேசலாம் என்ற விஜயகாந்த்.. போட்டுத் தாக்கும் சந்திரகுமார்
சென்னை: தேமுதிகவின் மனதில் அதாவது விஜயகாந்த்தின் மனதில் கூட்டணி குறித்த நிரந்தரமான -தெளிவான திட்டம் எதுவும் இல்லை என்பதையே இன்று வி.சி.சந்திரகுமார் கூறிய வார்த்தை விளக்குவதாக உள்ளது.
தனது ஆதரவாளர்களோடு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வி.சி.சந்திரகுமார் கூட்டணி தொடர்பாக விஜயகாந்துக்கும், தனக்கும் இடையே நடந்த உரையாடல்களையும் அம்பலப்படுத்தியுள்ளார். அதில் அவர் சொன்ன ஒரு வார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

"என்னிடம் கடைசியாக பேசியபோதுகூட, வேட்புமனுவை வாபஸ் பெறும் வரை கூட்டணி பேச முடியும், எனவே அமைதியாக இருங்கள் என்று விஜயகாந்த், கூறியதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வர உதவும் வகையில் விஜயகாந்த் முடிவு அமைந்து விட்டது. தொண்டர்கள் மனப்பாங்கை மதித்துதான் தலைவன் முடிவை எடுத்திருக்க வேண்டும். திமுகவோடு தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறது என்று பத்திரிகையில் செய்தி வந்தபோதுகூட விஜயகாந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. எனவே நாங்கள் நம்பிக்கையோடு இருந்து வந்தோம். மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் இணைய என்ன காரணம் என்று எங்களுக்கு இன்னும் விளங்கவில்லை" என்று கூறியுள்ளார் சந்திரகுமார்.
இதில் வேட்பு மனு தாக்கல் முடியும் வரை கூட பேச முடியும் என்று விஜயகாந்த் கூறியிருப்பதாக அவர் கூறியுள்ளதுதான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. இது உண்மையானால் விஜயகாந்த் மனதில் நிரந்தரமான, தெளிவான முடிவு எதுவும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
அப்படியானால், தற்போது மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக வைத்திருக்கும் உறவு நிரந்தரம் இல்லையா?
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துள்ள அதேசமயம், வேறு பக்கமும் தொடர்ந்து தேமுதிக பேச தயாராக உள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
சந்திரகுமார் கூறியது தவறு என்றால் மக்கள் நலக் கூட்டணியால் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட விஜயகாந்த்தான் விளக்கம் தர வேண்டும்..!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications