நீட் தேர்வு சோதனைகள், கெடுபிடிகள் சரிதான்...தப்பில்லை - இல.கணேசன் 'கருக்' ரியாக்ஷன் - வீடியோ
நீட் தேர்வின் போது நடத்தப்பட்ட சோதனைகளும் கெடுபிடிகளும் சரிதான். அப்போதுதான் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூரியுள்ளார்.
மதுரை: நீட் தேர்வில் சோதனைகள் நடத்தப்பட்டது சரிதான். அப்போதுதான் தேர்வில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என பாஜக ராஜ்யசபா எம்.பி இல.கணேசன் கூறியுள்ளார்.
இந்தாண்டு நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தபோது மாணவர்களை மெட்டல் டெடெக்டர் மூலம் சோதஹ்னை செய்தனர். முழுக் கை சட்டையின் கைகளை அறுத்து அரை சட்டையாக்கினார்கள். மாணவிகளின் தலைமுடியைகூட விட்டு வைக்கவில்லை.

இதன் உச்சகட்டமாக கேரளாவில் ஒரு மாணவியின் உள்ளாடையை கழட்ட சொன்னார்கள். இப்படி பலவித அருவெறுப்பூட்டும் செயல்களைச் செய்து மாணவர்களுக்கு மன உளைச்சலை உருவாக்கினார்கள்.
இதுகுறித்து மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன்,'' நீட் தேர்வின் போது சோதனை நடத்தப்பட்டதும் அங்கு நடந்த அத்தனை கெடுபிடிகளும் சரிதான். அதில் எந்த தவறுமில்லை.
அந்த சோதனைகள் மூலம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் குறையும். அதன் மூலம் திறமையில்லாத ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது. திறமையும் தகுதியும் உடைய ஒருவர் மருத்துவர் ஆவார். தமிழ்நாட்டில் ரேங்க் முறை ஒழிக்கப்பட்டதை வரவேற்கிறேன்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications