18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு.. அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம்: தமிழிசை
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இன்று தெரியும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.
Recommended Video

கோவை: 18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பு அணு குண்டாகவும் வெடிக்கலாம் அல்லது புஸ்வாணமாகவும் மாறலாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின்18 பேரின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அபபோது அவர் பேசியதாவது தமிழக அரசியலே எதிர்பார்க்கும் வகையில் 18 எம்எல்ஏக்களின் வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளது. வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாகவும் வெடிக்கலாம், புஸ்வாணமாகவும் மாறலாம்.
ராகுல்காந்தி எவ்வளவுதான் குறை கூறினாலும் மத்தியில் ஊழலற்ற ஆட்சி நடைபெறுவதால் பாஜக தலை நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் பதவியை துஷ்பிரயோகம் செய்து கார்த்தி ஊழல் செய்ய துணை போயுள்ளார் ப.சிதம்பரம்.
தமிழகத்தில் செயின் பறிப்பு தொடர் கதையாக உள்ளதால், பெண்கள் வெளியில் நடமாட பயப்படுகிறார்கள். இதனை தமிழக காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications