மழையால் அடித்துச் செல்லப்பட்ட சகோதரர்கள்.. வாட்ஸ்அப்பில் பரவும் பகீர் வீடியோ
காஞ்சிபுரம்: மழை வெள்ளத்தில் சகோதர்கள் இருவர் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு ஷாக் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் கோனேரி குப்பத்தை சேர்ந்தவர் குமரவேல் (45). கூலி தொழிலாளியான, இவருக்கு சரத் (19), சதீஷ் (17) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

இதில் சரத் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டும், சதீஷ் அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 வும் படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையில் ஏனாத்தூர் ஏரி தண்ணீரால் நிரம்பி வழிந்தது.
இதை பார்த்து ரசிப்பதற்காக, குமரவேல் தனது மகன்கள் சரத், சதீஷ்வுடன் மாலை நேரத்தில் ஏனாத்தூர் ஏரிக்கு சென்றார். ஏரியின் மேல் நின்று பார்த்து கொண்டு இருக்கும் போது குமரவேல் கால் தவறி ஏரிக்குள் விழுந்தார்.
இதனால் பதற்றம் அடைந்த சரத், சதீஷ்சும் தந்தையை காப்பாற்ற ஏரிக்குள் குதித்தனர். அப்போது 3 பேரையும் வெள்ளம் அடித்து சென்றது. குமரவேல் ஒரு மரத்தின் முனையை பிடித்து ஏரியின் கரைக்கு வந்து சேர்ந்தார்.
சரத், சதீஷ் ஆகிய இருவரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் 2 பேரையும் பேரிடர் மீட்பு குழுவும், தீயணைப்புதுறையினரும் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் ஏனாத்தூர் ஏரியில் இருந்து சற்று தொலைவில் சரத் உடல் கண்டெடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் போலீசார் சரத் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சதீஷ் நிலை என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து சதீசை பேரிடர் மீட்பு குழுவும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகிறார்கள். இதனிடையே, அவர்கள் அடித்து செல்லப்படும்போது சிலர் எடுத்த செல்போன் காட்சிகள் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது.












Click it and Unblock the Notifications