ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்த காங்கிரசார்!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை: சண்டையில கிழியாத சட்டை எங்கே இருக்கு... பெண்கள் சண்டை போட்டை கை தலைமுடிக்குத்தான் போகும். அப்படித்தான் சத்தியமூர்த்தி பவனில் நடந்த சண்டையில் ஹசீனா சையத் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்து அடித்துள்ளனர்.
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த ராகுல் காந்தி சத்தியமூர்த்தி பவனுக்கும் சென்றார். ராகுல் காந்தி வந்தபோது திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் கவுரி கோபால் சார்பில் வைக்கப்பட்ட வரவேற்பு பேனரில் அகில இந்திய செயலாளர் ஹசீனா சையத்தின் படம் இடம் பெறவில்லை.
இதனால் கெளரி கோபாலை திருவள்ளூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் செயலாளர் பொறுப்பில் இருந்து ஹசீனா சையத் நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஹசீனா சையத், தன்னை பகைத்துக் கொண்டால் என்ன நிகழும் என்று தற்போது கௌரி கோபாலுக்கு புரிந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கௌரி கோபால், மகிளா காங்கிரசின் அகில இந்திய செயலாளர் ஹசீனாவிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கடும் சண்டை
அப்போது கௌரிக்கு ஆதரவாக மகிளா காங்கிரசின் தமிழக செயலாளர் ஜான்சிராணியும், ஹசீனாவுடன் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் தமிழக மகிளா காங்கிரஸ் செயலாளர் ஜான்சிராணியும், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கௌரி கோபாலும் இணைந்து ஹசீனாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

நியாயம் கேட்ட கணவர்
அப்போது அங்கு வந்த ஹசீனாவின் கணவர் உமர், தனது மனைவியை தாக்கிய ஜான்சிராணி மற்றும் கௌரி கோபாலிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதனால் அங்கு மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.

ஆபாச பேச்சு
ஜான்சிராணி மற்றும் கௌரி கோபாலை ஹசீனாவின் கணவர் உமர் ஆபாசமாக பேசி தள்ளிவிட்டார். இதில் ஜான்சிராணி காயமடைந்தார். பொங்கியெழுந்த ஜான்சி ராணி மற்றும் கௌரி கோபாலுடன் இணைந்து கொண்டு ஹசீனாவின் கணவரை சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.

தாக்கிய பெண்கள்
ஒரு கட்டத்தில் ஜான்சிராணி மற்றும் கௌரி கோபாலிடம் இருந்து தனது கணவர் உமரை மீட்டு ஹசீனா சையத் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்படியும் விடாமல் ஹசீனாவின் கணவர் உமரை ஜான்சிராணியும், கெளரி கோபாலும் விரட்டி விரட்டி தாக்கினர்.

கொத்தோடு இழுத்த பெண்கள்
விடாமல் விரட்டி ஹசீனாவின் தலைமுடியை கொத்தோடு பிடித்து இழுத்தனர். சிலர் பாய்ந்து வந்து ஹசீனாவை காப்பாற்றினர். இந்த மோதலை அடுத்து சத்திய மூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சண்டை நடக்கலையே
மோதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், சத்தியமூர்த்தி பவனில் சண்டையெல்லாம் நடக்கலையே என்றார். பின்னர் சுதாரித்து மகளிர் காங்கிரஸ் அணியினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications