நேர்காணல்.. ஸ்டாலினிடம் கேள்வி கேட்டு கும்பிடு போட்டு அனுப்பி வைத்த துரைமுருகன்!
சென்னை: திமுக நேர்காணலில் ஒரு சுவாரஸ்யத்தை நேற்று அண்ணா அறிவாலயம் கண்டது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, தலைவர் கருணாநிதி நேர்காணல் கண்டதுதான் அது.
திமுக நடத்தி வந்த 12 நாள் நேர்காணல் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதியாக சென்னையில் உள்ள 6 தொகுதிகளுக்கு நேற்று கருணாநிதி தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது.
இதில்தான் அந்த சுவாரஸ்யம் அரங்கேறியது. அதாவது கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் சார்பில் மட்டுமே விருப்ப மனு தரப்பட்டிருந்தது. இதையடுத்து விருப்ப மனு கொடுத்தோர் அமரும் நேர்காணல் சேருக்கு இடம் மாறினார் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. திமுக மூத்த தலைவர் துரைமுருகன்தான் ஸ்டாலினிடம் அதிக கேள்விகளைக் கேட்டார். அதேபோல கருணாநிதியும், அன்பழகனும் சில கேள்விகளைக் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார்.
இதோ அந்த நேர்காணல் வீடியோ....!