ராம்குமார் பிரேதப் பரிசோதனை.. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் நடத்த 3வது நீதிபதி உத்தரவு
சென்னை: ராம்குமார் பிரேதப் பரிசோதனையை அரசு மருத்துவர்களே நடத்தலாம். அதேசமயம், டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவக் கழக மருத்துவரும் உடன் இருக்க வேண்டும் என்று 3வது நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தங்களது தரப்பு மருத்துவர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தையின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார். தற்போது 3 நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்பை அளித்துள்ளதால் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் அப்பீல் செய்ய ராம்குமாரின் தந்தை முடிவெடுத்துள்ளார்.

ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதால் தனியார் மருத்துவர் ஒருவர் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை பரமசிவம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக இரண்டு நீதிபதிகளுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வழக்கு 3வது நீதிபதி கிருபாகரனிடம் மாற்றப்பட்டது.
இதையடுத்து இன்று காலை இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. ராம்குமாரின் தந்தை சார்பில் வழக்கறிஞர் சங்கர சுப்பு ஆஜராகி தனது தரப்பின் நியாயத்தையும் ராம்குமாரின் மரணத்தின் மீதான சந்தேகத்தையும் எடுத்து வைத்தார். அதே போன்று தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் மணிசங்கர் ஆஜராகி வாதாடினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாணையை கேட்ட நீதிபதி கிருபாகரன் தீர்ப்பை இன்று மாலை அறிவிப்பதாக ஒத்தி வைத்தார்.
இன்று மாலை நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார். அதன்படி அரசு டாக்டர்களே பிரேதப் பரிசோதனையை நடத்தலாம் என உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன், அத்துடன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டரும் உடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
செப்டம்பர் 27ம் தேதிக்குள் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையை நடத்தி முடிக்கவும் நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். தனியார் மருத்துவரை நியமிக்க வேண்டும் என்ற ராம்குமாரின் தந்தையின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்து விட்டார்.
3 நீதிபதிகளும் வேறு வேறு தீர்ப்பை அளித்துள்ளதால் அப்பீல் செய்ய ராம்குமார் தரப்பு முடிவு செய்துள்ளது.
முன்னதாக குலவாடி ரமேஷ் மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்இந்த வழக்கை விசாரித்தபோது ராம்குமார் தரப்பு டாக்டர் உடன் இருக்கலாம் என்று நீதிபதி குலுவாடி ரமேஷ் தீர்ப்பளித்தார். ஆனால் நீதிபதி வைத்தியநாதனோ அரசு மருத்துவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்தே 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அவரோ எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் முன்னிலையில் நடத்தலாம் என்று கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications