500 ரூபாய் நோட்டு எங்கே? பொதுமக்கள் தவிப்பு
புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வராததால் நெல்லை மக்கள் தவித்து வருகின்றனர்.
நெல்லை: நெல்லைக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்த போதிலும் அவை புழக்கத்திற்கு வராததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 8ம் தேதி பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதையடுதது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ள மத்திய அரசு கால அவகாசம் கொடுத்தது. இந்த கால அவகாசம் கடந்த மாதம் 24ம் தேதியுடன் முடிந்தது. மேலும் பெட்ரோல் பங்குகளில் பழைய நோட்டுக்களை மாற்றும் அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதனால் வங்கிகள், ஏடிஎம்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பள பட்டுவாடா கடந்த வாரம் செய்யப்பட்டது. இதனால் அவர்களும் வங்கிகளில் பணம் எடுக்க திரண்டனர். ஆனால், போதிய அளவு பணம் வங்கி கையிருப்பில் இல்லாததால் அவர்களும் கடந்த நான்கு நாட்களாக அலைந்து வருகின்றனர். வங்கிகளில் கால் கடுக்க நின்று பணம் எடுத்தால் கூட அவை ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருக்கின்றன.
இதனால் இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வைத்து கொண்டு பென்சன்தாரர்கள் சில்லறைக்காக வீதி வீதியாக அலைந்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கதிற்கு வந்த போதிலும் அவை பொதுமக்களை இன்னும் சென்று சேரவில்லை என கூறப்படுகிறது.
ஒரு வங்கிக்கு ரூ.1.25 கோடி என்ற அளவில்தான் புதிய நோட்டுக்கள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படுகின்றன. ஒரு சில வங்கி கிளைகள் மதுரையில் உள்ள தங்களது வங்கி கிளைகள் மூலம் வந்ததைதான் மாவட்டம் முழுவதும் பிரித்து கொடுத்து வருகின்றன. இதனால் 500 ரூபாய் நோட்டை காண்பதே அரிதாக உள்ளது.
-
UPI-யில் பெரிய மாற்றம்.. அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்.. இனி பணம் அனுப்புறப்ப ரொம்ப கவனம்! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications