Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனிச்சீங்களா மக்களே... வானில் வளைத்து வளைத்து கட்டப்படும் மணல்வீடுகள்.. மழையாகுமா?

வானில் வளைத்து வளைத்து மணல்வீடுகள் கட்டப்படுவதால் விரைவில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வானில் வளைத்து வளைத்து மணல்வீடுகள் கட்டப்படுவதால் விரைவில் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் முதல் பல மாநிலங்களை மிரட்டிய தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் நிறைவு பெற்றதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் அன்றைய நாளிலேயே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அக்டோபர் 2ஆம் வாரம்

அக்டோபர் 2ஆம் வாரம்

இந்நிலையில் இதுவரை வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கான எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மாறாக அக்டோபர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று தகவல் பரவி வருகிறது.

[என் பேச்சு புரியவில்லையா?.. அமைச்சர் ஜெயக்குமாருக்கு டிக்ஸ்னரி அனுப்பிடுவோம்- கமல் நக்கல் ]

தமிழகத்தின் தேவை

தமிழகத்தின் தேவை

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க கூடியது. தமிழகத்தின் பெரும்பாலான தண்ணீர் தேவையை வட கிழக்கு பருவமழை பூர்த்தி செய்யும்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதனால் எப்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது. அதற்கேற்றார் போல் வெயிலின் தாக்கமும் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.

கிராமப்புறங்களில் கதை

கிராமப்புறங்களில் கதை

இந்நிலையில் கடந்த சில நாட்களாக வானில் வெண் மேக கூட்டங்கள் திரண்டு கூட்டம் கூட்டமாக பளிச்சென காட்சியளிக்கின்றன. நீள வானில் வெள்ளை நிற மேகக்கூட்டங்கள் ரம்மியமாக காட்சியளித்தாலும் இதற்கு தனிக்கதையே கூறப்படுகிறது கிராமப்புறங்களில்.

வானில் மணல் வீடு

வானில் மணல் வீடு

அதாவது, வானில் திரண்டிருக்கும் இந்த வெண் மேகக்கூட்டங்களை பார்க்கும் மக்கள் வானில் மணல் வீடு கட்டப்படுகிறது என்கின்றனர். இந்த வெண் மேகங்களே கரு மேகங்களாக மாறி மழையை கொடுக்கும் என்றும் கூறுகின்றனர்.

மணல் வீடுகள் மழையாகுமா?

மணல் வீடுகள் மழையாகுமா?

வானம் தெளிவாக இருப்பதை விட இதுபோன்று ஆங்காங்கே வெண்மேகங்கள் திரண்டிருந்தால் விரைவில் நல்ல மழை பெய்யும் என்றும் கூறுகின்றனர் மக்கள். இதனால் கடந்த சில நாட்களாக வானில் வெண் மேகக்கூட்டங்கள் தென்படுவதால் விரைவில் நல்ல மழை பெய்யும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர் கிராமப்புற மக்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.. மணல் வீடுகள் மழையாகுமா என்று...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+