For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பொறுக்கி பொறுக்கி"ன்னு சொல்லும் சு.சாமிக்கு கடிவாளம் போடுவது யார்?

Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்றத்தில் நேற்று சுப்பிரமணியம் சாமி தனக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்று கூறி ரொம்பவே பயந்து போய் பேசினார். இதையடுத்து சுப்பிரமணியம் சாமிக்கு எந்த இடையூறும் தமிழகத்தில் ஏற்படக் கூடாது என்று உச்சநீதிமன்றமும் ஜெயலலிதா தரப்பு வக்கீலிடம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த தீர்ப்பு வந்த கையோடு டிவிட்டருக்குத் தாவிய சாமி, அதில் பொறுக்கிகளை ஜெயலலிதா கட்டுப்படுத்த வேண்டும் என்று பப்ளிக்காகவே ஒரு டிவிட் போட்டார்.

Who will stop Swamy from using the word 'Porukki'?

இவர் அதிமுகவினரை மட்டும் பொறுக்கி என்று சொல்வதில்லை. மாறாக, தனக்கு எதிராக யார் போராடினாலும், அவர்கள் சாமியைப் பொறுத்தவரை பொறுக்கிதான்.

பொறுக்கி என்ற அநாகரீகமான வார்த்தையை நாகரீகமான வாரத்தை போலவே பாவித்து வர ஆரம்பித்து விட்டார் சாமி. இவரது டிவிட்களை எடுத்து அதில் பத்தைப் படித்தால் ஐந்தில் பொறுக்கி என்ற வார்த்தையை பொறுக்கி எடுக்கலாம்.

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள், அதில் ஈடுபடுபவர்களை இவர் பொறுக்கி என்றுதான் செல்லமாக கூறுவார். அதேபோல இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக போராடுபவர்களை இவர் சொல்வது எலிகள் என்று. இன்னும் பல அநாகரீகமான வார்த்தைகளையும் கூட இந்த சாமி பயன்படுத்த அஞ்சுவதில்லை.

எனவே அநாகரீகமான பொறுக்கி என்ற வார்த்தையை உலகம் பூராவும் டிவிட்டர் மூலம் பரப்பி வரும், இந்த சாமியைக் கண்டித்து கடிவாளம் போடப் போவது யாரோ.. தெரியவில்லை.

English summary
Will somebody come forward to curb Subramaniam Swamy from using the word Porukki?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X