ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஏன் அதிரடிப் படை அமைக்கக் கூடாது? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்பதற்காக அதிரடிப்படையை ஏன் அரசு அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கும் ஆய்வுகள் 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஆனால் முடிவடையவில்லை.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் அரசு நிலத்தை மீட்க 2008-ல் அதிரடி படை உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் ஒரு அதிரடிப்படை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை அரசு பரிசீலிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இம் மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம் மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்கவேண்டும். கர்நாடகா மாநிலத்தில் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு ஏராளமான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்திலும் ஆக்கிரமிப்புப்பாளர்களிடம் இருந்து அரசு நிலத்தை மீட்க ஒரு அதிரடிப்படையை ஏன் அமைக்கக்கூடாது? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தி பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications