ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஏன் அதிரடிப் படை அமைக்கக் கூடாது? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்பதற்காக அதிரடிப்படையை ஏன் அரசு அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கும் ஆய்வுகள் 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஆனால் முடிவடையவில்லை.

ஆனால் கர்நாடக மாநிலத்தில் அரசு நிலத்தை மீட்க 2008-ல் அதிரடி படை உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் ஒரு அதிரடிப்படை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை அரசு பரிசீலிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இம் மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம் மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்கவேண்டும். கர்நாடகா மாநிலத்தில் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு ஏராளமான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்திலும் ஆக்கிரமிப்புப்பாளர்களிடம் இருந்து அரசு நிலத்தை மீட்க ஒரு அதிரடிப்படையை ஏன் அமைக்கக்கூடாது? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தி பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications