கிரண்பேடியை லதா ரஜினிகாந்த் ஏன் சந்தித்தார் தெரியுமா?
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை லதா ரஜினிகாந்த சந்தித்து பேசியுள்ளார். இதன் காரணமாக புதுச்சேரி தூய்மை இந்தியா இயக்கத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நல்லெண்ண தூதராக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி சமீபத்தில் புதுவை மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றார். புதுவையை தூய்மையாக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.
We Met. Inspirational meeting with Mrs Latha RajiniKanth. pic.twitter.com/EvnoeLul8N
— Kiran Bedi (@thekiranbedi) August 10, 2016
இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை புதுவை மாநில வளர்ச்சிக்கு நல்லெண்ணத் தூதராக நியமிக்க கிரண்பேடி தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ரஜினி இதுவரை இதுகுறித்த முடிவை தெரிவிக்காத நிலையில் தற்போது ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கிரண்பேடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பில் புதுவை மாநிலத்தின் நல்லெண்ண தூதராக ரஜினி பொறுப்பேற்பது குறித்து பேசப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.