தேர்தல் செலவுக்கான கட்சி பணம் 'ஸ்வாகா'.... மா.செ.க்களை திமுக தூக்கி அடித்தன் பின்னணி
சென்னை: சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவின் 3 மாவட்ட செயலர்களான வீர.கோபால், காந்தி செல்வன் மற்றும் துரைராஜ் ஆகியோர் அதிரடியாக நேற்று அப்பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டனர். இவர்கள் தேர்தல் செலவுக்காக கட்சி தலைமை கொடுத்த பணத்தை அப்படியே கபளீகரம் செய்து கொண்டனர்; வேட்பாளர்களிடம் இருந்து பணம் பெற்றனர் என்ற புகார்களால்தான் மூவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தெரிவித்த புகார்கள் மீது திமுக மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் முதல் கட்டமாக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலர் காந்தி செல்வன், கோவை வடக்கு மாவட்ட செயலர் வீரகோபால், நெல்லை மேற்கு மாவட்ட செயலர் துரைராஜ் ஆகியோர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

வீரகோபால்
கோவை வடக்கு மாவட்ட வீர்கோபால் தேர்தலில் முழுமையாக ஒத்துழைப்பு தரவில்லை என்று வேட்பாளர் மீனா லோகு கருணாநிதியிடம் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். தம்மிடம் ரூ10 லட்சம் ரூபாய் பணத்தை அடம்பிடித்து கேட்டு வாங்கியும் வீரகோபால் தேர்தல் பணி செய்யவில்லை எனவும் மீனா லோகு குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் மீனா லோகு, பொங்கலூர் பழனிச்சாயின் ஆதரவாளர் என்ற காரணத்தாலும் கோஷ்டி பூசலால் வீரகோபால் வேலை செய்யவில்லை என்கின்றனர் திமுகவினர். இதனால்தான் அவரது பதவி பறிக்கப்பட்டதாம்.
காந்தி செல்வன்
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலரான காந்தி செல்வனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அதிருப்தியில் இருந்தார். அவரிடம் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுக்கு என கட்சித் தலைமை கொடுத்த பணம் அப்படியே அவருடைய கல்லாவிலேயே தங்கிவிட்டதாம். குறிப்பாக ராசிபுரத்தில் எளிதாக திமுக வென்றுவிடும் நிலை இருந்தும் எங்கே வி.பி. துரைசாமி வெற்றி பெற்று நமக்கு போட்டியாக மாவட்டத்தில் உருவாகிடுவாரோ என கருதி காந்திசெல்வன் பிரசாரத்துக்கும் செல்லவில்லையாம்.
துரைராஜ்
இதேபுகார்தான் நெல்லை மேற்கு மாவட்ட செயலர் துரைராஜ் மீதும் வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்டதாம். அத்துடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியனுடன் நெருக்கத்தை தொடர்ந்தும் காட்டி வந்ததால் கட்சி மேலிடம் பதவியை பறித்துவிட்டது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
-
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!












Click it and Unblock the Notifications