ரஜினி ஒரு 'காமன் மேன்'... அதனால்தான் அரசியலுக்கு வரக் கூடாது என்கிறேன்...ஈ.வி.கே.எஸ்!
சென்னை: ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவானவர். அத்தகையவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது என்பதற்காகவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று தான் கூறியதாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைத்து வர பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்று தெரிவித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில் இது குறித்து அவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,

பாஜக
ரஜினி எங்கே பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்று நினைத்து நான் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறவில்லை.

ரஜினி
தந்தை பெரியார், காமராஜர் உள்ளிட்டவர்களை அரசியலையும் தாண்டி மக்கள் கொண்டாடுகிறார்கள். அதே போன்று ரஜினியும் அனைவருக்கும் பொதுவானவர்.

அரசியல்
ரஜினி ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனர். பொதுவான மனிதரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைக்கக் கூடாது. அதனால் தான் அவர் அரசியலுக்கு வரக் கூடாது என்றேன்.

சந்திப்பு
நான் விரைவில் ரஜினிகாந்தை சந்தித்து பேசவிருக்கிறேன் என்றார் இளங்கோவன். இளங்கோவன் இவ்வாறு கூற காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜி.கே. வாசனோ தனது புதிய கட்சிக்கு ரஜினியின் ஆதரவை பெறத் துடிக்கிறார்.












Click it and Unblock the Notifications