ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் ஏன்?-போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம்
ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் போது வன்முறையில் ஈடுபட்டதால்தான் குண்டர் சட்டத்தில் கைது செய்தோம் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடைப்பெற்றது. ஆனால் இங்கு அவர்கள் வன்முறையில் ஈடுப்பட்டதால் தான் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தோம் என்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
காவல்நிலையத்தில் குறைகளை மனுவாக பெற புதிய திட்டம் அறிமுகம் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் பேட்டி அளித்துள்ளார். மேலும் காலை மற்றும் மாலையில் மக்களை ஆய்வாளர் நேரடியாக சந்திப்பார் என அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் ஆணையர் விஸ்வநாதன் பேசினார்.

சிசிடிவி கேமரா
அப்போது அவர், காவல்நிலையங்களில் சி.சி.டி.வி கேமரா பொருத்தும பணி நடைப்பெற்று வருகிறது. விரைவில் இந்த பணி அனைத்து காவல்நிலையங்களிலும் செய்து முடிக்கப்படும்.

பொதுமக்களுடன் சந்திப்பு
காலை 11 மணியில் இருந்து 12:30 மணி வரையும் , மாலை 8 மணியில் இருந்து 9 மணி வரை அந்தெந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்களை நேரில் சந்தித்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

சென்னை சில்க்ஸ் இடிப்பு
சென்னையில் போக்குவரத்தை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தி.நகரில் தீவிபத்துக்கு உள்ளான கட்டிடம் எந்த அபாயமும் இல்லாமல் இடிக்கப்படும். அதன் பின்னர் கட்டிடத்தில் அருகில் உள்ள மக்கள் தங்கள் பகுதிக்கு வரலாம்.

போக்குவரத்து சிக்னல்
சென்னையில் ஏற்பட்ட வர்தா புயலின் போது பாதிப்படைந்த சிக்கனல்களை, சீரமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணி துவங்க உள்ளது.

குண்டர் சட்டம் ஏன்?
ஈழதமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடைப்பெற்றது. ஆனால் இங்கு அவர்கள் வன்முறையில் ஈடுப்பட்டதால் தான் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.

பைக் ரேஸ்
பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் மயிலாப்பூரில் நடந்த பைக் ரேசால் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications