தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
இதனால் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளும் முடக்கப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்சேவைகளும் பாதிக்கப்பட்டன.

நீதிமன்றம் கேள்வி
இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி தவிர மற்ற இரண்டு மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியது.

இன்டர்நெட் முடக்கம் ஏன்?
தூத்துக்குடியில் போராட்டம் நடந்ததால் மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் முடக்கம் ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இன்டர்நெட் முடக்கம் தொடர்பாக அரசு தரப்பு 3 மணிக்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

2 மாவட்டங்களுக்கு சேவை
அதற்குள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு 8 பேர் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாளையே முடிவு செய்ய வேண்டும்
அதன்படி வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி இணையதள சேவை குறித்து நாளை முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இணையதள சேவை மறு ஆய்வு குழு நாளையே முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications