தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும்.. ஹைகோர்ட் அதிரடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் இணையதள சேவை வழங்குவது குறித்து நாளையே முடிவு செய்ய வேண்டும் என ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.
இதனால் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளும் முடக்கப்பட்டன. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்சேவைகளும் பாதிக்கப்பட்டன.

நீதிமன்றம் கேள்வி
இந்நிலையில் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 8 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி தவிர மற்ற இரண்டு மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பியது.

இன்டர்நெட் முடக்கம் ஏன்?
தூத்துக்குடியில் போராட்டம் நடந்ததால் மற்ற 2 மாவட்டங்களில் இன்டர்நெட் முடக்கம் ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் இன்டர்நெட் முடக்கம் தொடர்பாக அரசு தரப்பு 3 மணிக்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

2 மாவட்டங்களுக்கு சேவை
அதற்குள் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்டர்நெட் சேவை முடக்கத்தை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு 8 பேர் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாளையே முடிவு செய்ய வேண்டும்
அதன்படி வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் தூத்துக்குடி இணையதள சேவை குறித்து நாளை முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இணையதள சேவை மறு ஆய்வு குழு நாளையே முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications