தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக்காலத்தை நீட்டித்தது ஏன்? அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறவிருந்த தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக் காலம் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்நிலையில், சிறப்பு அதிகாரிகளின் பதவிக் காலத்தை தமிழக அரசு நீட்டித்தது. இந்த நீட்டிப்புக் கூடாது என நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை தனி அதிகாரிகள் செயல்படுவார்கள் என்று தமிழக அரசு பதில் மனு அளித்துள்ளது.
இதனையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications