எம்.ஜி.ஆர். சொன்ன முக்கிய விஷயம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் செலவுக்கு... எம்.ஜி.ஆருக்கு உதவும் விதமாக எம்.ஜி.ஆரைச் சந்தித்து பணத்தைக் கொடுத்தார் தேவர்.

அண்ணே... இந்தப் பணத்தை நீங்களே வச்சுக்கங்க. தேவையான பணம் எனக்கு கிடைச்சிடுச்சு. கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் ஒரு தொகை கொடுத்தார். ஜேப்பியார் ஒரு தொகை கொடுத்தார். எனக்கு நெருக்கமான சிலரும் பணம் கொடுத் திருக்காங்க. இப்போது இந்தப் பணம் தேவைப்படாதுண்ணே என எம்.ஜி.ஆர். சொல்ல...

Why MGR launched ADMK Party?

அவங்கள்லாம் உங்களுக்கு தேர்தல் செலவுக்கு உதவும்போது, நான் உங்களுக்குச் செய்யலேன்னா நன்றிகெட்ட செயலாயிடும். கண்டிப்பா இந்த பணத்தை ஏத்துக்கணும்'''எனச் சொல்லி கொடுத்துவிட்டு வந்ததாக என்னிடம் சொன்னார் தேவர்.

ஒவ்வொரு நாளும் பூஜையறையில் "முருகா... எப்படியாவது நீ ஜனங்க மனசுல புகுந்து, எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப் போட வை. நான் உன் உண்டியல்ல நோட்டப் போடுறேன். நீ பாராமுகமா இருந்தா மருதமலைக்கு வந்து உன் தலையில வேட்டப் போடுவேன்'''என லட்சார்ச்சனை போல் "ஓட்டு -நோட்டு -வேட்டு''என இதையே சொல்லி பூஜை செய்து வந்தார் தேவர்.

Why MGR launched ADMK Party?

இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு வெற்றி கிடைத்ததும், மருதமலை சென்ற தேவர் உண்டியலில் நோட்டுக் கட்டுகளைப் போட்டுவிட்டு, முருகனுக்கு நன்றி சொல்லி அபிஷேகமும் செய்துவிட்டு பிரசாதத்துடன் சென்னை திரும்பினார். முதல் வேலையாக எம்.ஜி.ஆரைப் 'பார்த்து "நீங்க ஜெயிக்கணும்னு முருகனை வேண்டிக்கிட்டேன். அவனும் ஜெயிக்க வச்சிட்டான்''' எனச் சொல்லி பிரசாதத்தைக் கொடுத்திருக்கிறார் தேவர்.

அதை வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர்., தேவரை தனியறைக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசியிருக்கிறார்.

அப்போது தனது அரசியல் குறித்து தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்னதை, தேவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+